பட்டாபிராமர் கோவில் – ஹம்பி

இந்த வருட கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ஹம்பி செல்லலாம் என்று 2, 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு அதை ஒரு வழியாக செயல்படுத்தியும் விட்டோம். ஏற்கனவே 2005-ம் வருடம் ஒரு முறை ஹம்பி சென்று வந்துவிட்ட காரணத்தினால், அப்பொழுது என்னென்னவெல்லாம் விட்டு போய் இருந்ததோ அங்கெல்லாம் சென்று விட முடிவெடுத்தோம். அதன் படி மூன்றாம் நாள் நாங்கள் சென்றது கமலாபுரம் என்னும் ஊரில் இருக்கும் பட்டாபிராமர் கோவில். அதென்ன முதல் இரண்டு நாட்களுக்கு சென்று வந்த இடங்களை எல்லாம் விட்டுவிட்டு மூன்றாம் நாள் சென்ற கோவில் மட்டும் என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. ஏனோ இந்த கோவில் எனக்கு அவ்வளவு பிடித்து போனது. பிடித்ததிற்கான காரணத்தை சொல்ல முடியவில்லை. ஏதோ ஓர் ஈர்ப்பு.

கோவிலின் முகப்பில் இருக்கும் மண்டபம்....

கோவிலின் முகப்பில் இருக்கும் மண்டபம்….

கோவிலின் உள்தோற்றம்....

கோவிலின் உள்தோற்றம்….

இந்தக் கோவில் 1540-ம் வருடம் அச்சுதராய மன்னரின் ஆட்சிக்காலத்தில் திம்மராயர் என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள கோபுரம் பிற்கால விஜயநகர கட்டிடக்கலைக்கு நல்ல ஒரு உதாரணம். இது சோழ கட்டிடக்கலை முறையில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இது கமலாபுரம் தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. ஆனால் விருபாக்ஷா மற்றும் விட்டலா கோவில்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏனோ இந்த கோவிலுக்கு வருவதில்லை. அதனால் நாங்கள் அங்கு சென்றிருந்த போது யாருமே இருக்கவில்லை. அதுவே ஒரு வெறுமையை கொடுத்தது. 2005-ல் நாங்கள் செய்த பெரிய தவறு, இந்த கோவிலுக்கு செல்லாதது தான்.

அம்மன் சன்னதிக்கு வழிகாட்டும் கோவில் சுவர்கள்...

அம்மன் சன்னதிக்கு வழிகாட்டும் கோவில் சுவர்கள்…

விட்டலா கோவில் அளவுக்கு பெரியதாய் இருக்கிறது இந்த பட்டாபிராமர் கோவிலும். அந்த கோவில் அளவுக்கு வேலைப்பாடுகள் இல்லை தான், இருந்தாலும் அழகில் சற்றும் குறைந்து விடவில்லை. இங்கிருக்கும் மண்டபத்தின் முதல் வரிசை தூண்களில் அழகான இரண்டு யாழிகள் பிரமாண்டத்தை கூட்டுகின்றன. அங்கிருக்கும் தூண்களின் அடிப்பாகத்தை சிங்கங்கள் தாங்கிப்பிடித்திருப்பதிலிருந்து, இது சோழர்களின் கட்டிடக்கலை பாணி என்று தெரிந்து கொள்ள முடிகிறது(இதை என் தோழி லக்ஷ்மி-யிடமிருந்து சுட்டது).

பிரதான மண்டபத்தின் அடிப்பாகத்தில் சிங்கங்களின் சிலைகள்....

பிரதான மண்டபத்தின் அடிப்பாகத்தில் சிங்கங்களின் சிலைகள்….

மண்டபத்தின் முகப்பில் இருக்கும் யாழி சிலைகள்....

மண்டபத்தின் முகப்பில் இருக்கும் யாழி சிலைகள்….

கோவில் முழுக்க சுற்றிவிட்டு நடுவில் இருக்கும் கற்பக்கிரகத்திற்கு சென்றோம். அங்கு பட்டாபிராமர் இருக்க வேண்டிய இடம் காலியாக இருந்தது. பிற்காலத்தில் வேறு பல மன்னர்களின் ஆக்கிரமிப்பின் பொழுது சூறையாடப்பட்டிருக்கலாம். ஏனோ அதைப்பார்க்கையில் பறவை இல்லாத பறவைக்கூட்டைப் பார்த்ததைப் போன்றதொரு வருத்தம்.

IMG_1335copy

பிரதான மண்டபத்தின் உள்தோற்றம்....

பிரதான மண்டபத்தின் உள்தோற்றம்….

பட்டாபிராமர் சன்னதிக்கு முன் இருக்கும் பிரதான மண்டபம்....

பட்டாபிராமர் சன்னதிக்கு முன் இருக்கும் பிரதான மண்டபம்….


பிறகு இங்கிருக்கும் கோபுரமும் அதே சோழர் பாணியில் காட்சியளிக்கிறது. கோபுரத்தின் அடிப்பாகம் கற்களினாலும், மேல் பாகம் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையினால் கட்டி இருக்கிறார்கள். கோபுரத்தின் மேல்பாகம் காலத்தினால் சற்றே களையிழந்து போயிருந்தது.

கோபுரத்தின் மேல் வளர்ந்திருக்கும் செடிகள்....

கோபுரத்தின் மேல் வளர்ந்திருக்கும் செடிகள்….

அதனையும் கற்களினாலேயே கட்டி இருந்திருந்தால் திம்மராயர் கட்டும் பொழுது இருந்திருந்த அதே அழகு இன்று வரை நீடித்திருக்குமே என்ற ஆதங்கமே மிஞ்சியது.

Lepakshi

தீபாவளிக்கு வீட்டிலேயே இருந்து டிவி மட்டும் பார்ப்பது bore என்பதினால் 2, 3 வருடங்களாக எங்கேயாவது பக்கத்து ஊர்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த தீபாவளிக்கு எங்கு செல்வது என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது சட்டென பாலாஜியின் நினைவுக்கு வந்தது “லெபக்ஷி” தான்.

லெபக்ஷி, பெங்களூரில் இருந்து, ஹைதராபாத் சாலையில் 120கி.மீ. தொலைவில், கர்நாடகா எல்லை முடிவில், ஆந்திரா மாநில ஆரம்பத்தில் உள்ளது. பெங்களூரில் இருந்து காரில் பயணம் செய்தால் 2 மணி நேரத்தில் சென்றடையலாம்.

கோவிலின் முன்தோற்றம்....

கோவிலின் முன்தோற்றம்….

லெபக்ஷி – யில் உள்ள வீரபத்திரர் கோவில் விஜயநகர கட்டிடக்கலையின் பாணியில் கட்டப்பட்டதாகும். இக்கோவில் அகஸ்தியரால் கட்டப்பட்டதாக கருதப்பட்டாலும், இன்று இருப்பதோ 16-ம் நூற்றாண்டில் வீரண்ணா மற்றும் விருபண்ணா சகோதரர்களால் விஸ்தரிக்கப்பட்ட கோவிலே. இவ்விரு சகோதரர்கள், விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த பெனுகொண்டாவின் கருவூலத்தாரராக இருந்தவர்கள். இந்தக் கோவில் 5 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஒரே கல்லில் கட்டப்பட்டிருக்கிறது. எந்த அஸ்திவாரமும் போடப்படவில்லை என எங்களுக்கு கோவிலைப்பற்றி விவரித்த guide கூறினார்.

கோவிலில் நுழைந்தவுடன் அழகான நாட்டிய அரங்கு மற்றும் அதில் கலைநயத்துடன் செதுக்கி இருக்கும் சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றன.

நாட்டிய அரங்கின் கூரை....

நாட்டிய அரங்கின் கூரை….

நாட்டிய அரங்கின் தூண்களில் சிற்பங்கள்....

நாட்டிய அரங்கின் தூண்களில் சிற்பங்கள்….


அரங்கின் கூரையிலும் அழகழகான ஓவியங்கள். அந்த ஓவியங்கள் அனைத்தும் இயற்கையில் கிடைக்கும் வண்ணகளைக் கொண்டே வரையப்பட்டிருக்கின்றன. இங்கு உரல் போன்றதொரு அமைப்பு கோவில் முழுவதும் ஆங்காங்கே காணப்படுகிறது. அதில் காய்கறி மற்றும் செடிகொடிகளை அரைத்து, அதிலிருந்து எடுக்கப்படும் சாறுகளே ஓவியம் வரைய பயன்படுத்தி இருக்கின்றனர்.

கோவில் கூரையில் வீரண்ணா மற்றும் விருபண்ணா ஆகியோரின் ஓவியம்....

கோவில் கூரையில் வீரண்ணா மற்றும் விருபண்ணா ஆகியோரின் ஓவியம்….


இயற்கை வண்ணங்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உரல்....

இயற்கை வண்ணங்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உரல்….

இந்த அரங்கில் காணப்படும் பல தூண்களில் ஒன்று அடித்தளத்தில் உட்காராமல், மேற்கூரையிலிருந்து மட்டுமே தொங்கிக்கொண்டிருக்கிறது!!!!.

தொங்கும் தூண்...

தொங்கும் தூண்…


ஒரே கல்லில் செதுக்கிய பிரமாண்டமான ஏழு தலைகளுடைய நாகலிங்கச் சிலை ஒன்றும் வெளிப்பிரகாரத்தில் உள்ளது. சிலை உருவான சுவாரசியமான கதையையும் நம் guide கூறினார். இதை செதுக்கிய சிற்பிகளின் தாயார் அவர்களுக்கு மதிய சாப்பாடு தயார் செய்வதற்குள் இச்சிலையை அவர்கள் வடித்துள்ளனர். சமையலை முடித்துவிட்டு வந்து பார்த்த தாயின் கண்திருஷ்டி பட்டு சிலையின் இரண்டு இடங்களில் விரிசல் வந்துவிட்டதாம்.

நாகலிங்க சிலை....

நாகலிங்க சிலை….


நாகலிங்க சிலைக்கு பக்கவாட்டில் உள்ள சப்தகன்னியர்கள்...

நாகலிங்க சிலைக்கு பக்கவாட்டில் உள்ள சப்தகன்னியர்கள்…

இந்த சிலையின் பின்புறத்தில் பெரிய விநாயகர் சிலை, எந்த ஒரு நல்ல காரியத்தை செய்வதற்கு முன்பு அவரை வழிபட்டுவிட்டு தான் ஆரம்பிக்கவேண்டும் என்பதற்கு அடையாளமாக, இக்கோவிலை கட்டுவதற்கு முன் வடிக்கப்பட்டிருக்கிறது.

விநாயகர் சிலை ...

விநாயகர் சிலை …


இங்கு வரும் மக்களின் ஆர்வத்தை ஈர்க்கும் மற்றுமொரு விஷயம் – வெளிப்பிரகாரத்தில் இருக்கும் சரியாக கட்டப்படாத, பாதியில் நின்று போன திறந்தவெளி கல்யாண மண்டபம். மண்டபத்தின் தூண்களில் பல்வேறு கடவுளரின் உருவங்களை அழகாக கலைநயம் பட செதுக்கி வைத்துள்ளனர்.

திறந்தவெளி கல்யாண மண்டபத்தின் முன் தோற்றம்....

திறந்தவெளி கல்யாண மண்டபத்தின் முன் தோற்றம்….


திறந்தவெளி கல்யாண மண்டபம்...

திறந்தவெளி கல்யாண மண்டபம்…


திறந்தவெளி கல்யாண மண்டபம்...

திறந்தவெளி கல்யாண மண்டபம்…


கல்யாண மண்டபமும் ஏன் பாதியில் நின்று போனது என்பதற்கும் காரணங்களை “guide” கூறினார். விருபண்ணா காலத்தில் அரசராக இருந்தவரிடம் சிலர், விருபண்ணா, கோவில் கட்டுவதாகக் கூறி பணத்தை விரயம் செய்கிறார் எனக் கூறியதினால் அவருடைய கண்களை பிடுங்கச் சொல்லி உத்தரவிட்டார். இதைக் கேள்விப்பட்ட விருபண்ணா, தன் கண்களை தானே பிடுங்கி எரிந்துள்ளார். அவர் கண்களை வீசி எறிந்த இடம் இன்னமும் ரத்தக்கறையுடன் காணப்படுகிறது. ஆதலால் கல்யாண மண்டபமும் பாதியில் நின்று போனது.

கோவில் சுவரில் விருபண்ணா, தன கண்களை வீசி எறிந்த இடம் ரத்தக்கறையுடன்...

கோவில் சுவரில் விருபண்ணா, தன கண்களை வீசி எறிந்த இடம் ரத்தக்கறையுடன்…

நாங்கள் சென்றது நவம்பர் மாதமாதலினால் வெயிலின் கடுமை சற்று குறைவாகவே இருந்தது. ஆகவே வெளிப்பிரகாரத்தில் சற்று சிரமமில்லாமல் நடக்க முடிந்தது. அப்படி நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது பெரிய கால்தடம் ஒன்றும், அதில் எப்பொழுதும் நீர் வற்றாமல் இருப்பதினால் உண்டாகும் பூஞ்சையையும் பார்த்தோம். அது சீதையினுடையது என்றும், இராவணனால் சீதை கடத்தப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லும் பொழுது “ஜடாயு” என்ற பறவை இராவணனை வழிமறித்து சண்டையிட்டது நம் அனைவருக்கும் தெரியும். அப்படி சண்டையிட்டது இந்தக்கோவில் கட்டப்படிருக்கும் கல்லின் மேல் தான் என்பது “guide ” நமக்கு கூறியது புது விஷயம். “ஜடாயு” இராவணனால் காயப்படுத்தப்பட்டு தரையில் விழுந்தபின் சீதை தன் பாதத்தை கல்லின் மேல் பதித்து, அதில் எப்பொழுதும் தண்ணீர் சுரக்கும்படி செய்ததாகவும், அந்த தண்ணீரை குடித்துவிட்டு “ஜடாயு” இராமன் வரும் வரை உயிர் வாழ்ந்து பின் விஷயத்தைக் கூறியிருகிறதாகவும் நம்பப்படுகிறது. பின்பு இராமன் “Le Pakshi”(rise o’ bird) எனக்கூறிய பின் மோக்ஷம் அடைந்ததினால் இத்தலத்திற்கு Lepakshi எனப் பெயர் வந்ததாக கருதப்படுகிறது.

சீதையின் பாதம், எப்பொழுதும் வற்றாத தண்ணீர் ஊற்றுடன் ....

சீதையின் பாதம், எப்பொழுதும் வற்றாத தண்ணீர் ஊற்றுடன் ….

வேலையின் போது சிற்பிகள் பயன்படுத்திய சாப்பாட்டுத் தட்டு....

வேலையின் போது சிற்பிகள் பயன்படுத்திய சாப்பாட்டுத் தட்டு….

யாழி..

யாழி..

அழகிய சிற்பங்கள்....

அழகிய சிற்பங்கள்….

வெளிப்பிரகாரம்....

வெளிப்பிரகாரம்….

இந்தக் கதைகள் அனைத்தையும் நம்மால் நம்ப முடியாவிட்டாலும், கற்பனை நிறைந்த கதைகளை சிறுவயது முதலே நம் அனைவருக்கும் கேட்டுப் பழக்கபட்டதினால் அவையெல்லாம் சுவாரசியமாகவே இருந்தன.

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நந்தி....

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நந்தி….

கோவிலைப் பார்த்து விட்டு அங்கிருந்து அருகில் இருக்கும் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட நந்தியையும் பார்த்து விட்டு வீடு திரும்புவதற்காக காரில் புறப்பட்டோம். காரில் பயணிக்கும் பொழுது சிறுது தூரம் வெயில், சிறுது தூரம் மழை என நவம்பர் மாத வானிலையை ரசித்ததினால் பயணித்த களைப்பு தெரியவில்லை.

Coorg பயணம் – தலைக் காவேரி மற்றும் Abbey நீர்வீழ்ச்சி

Brahmagiri hills

Coorg பயணத்தின் முதல் நாளாக Bylakuppe புத்த மடத்தை பற்றி எழுதி இருந்தேன். இரண்டாவது நாளில் பாகமண்டலா – தலைக் காவேரி மற்றும் Abbey நீர்வீழ்ச்சிக்கு சென்றிருந்தோம்.

பாகமண்டலா – தலைக் காவேரி

தலைக் காவேரி நாங்கள் தங்கி இருந்த Madikeri எனும் ஊரிலிருந்து 56 கி.மீ தொலைவில் இருந்தது. முதலில் தலைக் காவேரி சென்றுவிட்டு பின்பு பாகமண்டலா செல்லலாமென்று முடிவெடுத்து தலைக் காவேரி சென்றோம்.
காலை 8 மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டதினால் வழி முழுக்க பனி மூட்டமாகவே இருந்தது. பனிமூட்டத்தின் நடுவில் காப்பித் தோட்டமும், வானுயர்ந்த மரங்களில் படர்ந்திருந்த மிளகு கொடியும், நாம் சுவர்கத்தின் நடுவில் தான் செல்கிறோமோ என்றதொரு பிரமிப்பைக் கொடுத்தது. நேரம் செல்லச் செல்ல பசி மெதுவாக வயிற்றைக் கிள்ளவே, பாகமண்டலத்தில் காலை உணவை முடித்துக் கொண்டு தலைக் காவேரி சென்றடைந்தோம்.

பாகமண்டலா செல்லும் வழியில்.....

பாகமண்டலா செல்லும் வழியில்…..

அங்கும் அதே மாதிரியான வானிலையே. பனி மூட்டத்தின் நடுவில் காவேரி நதி ஆரம்பிக்கும் இடத்தைப் பார்க்கவே அற்புதமாக இருந்தது. இந்த இடம் கடல் மட்டதிற்கு மேல் 1276 மீ உயரத்தில் அமைந்திருகிறது. இங்கு காவேரி நதி ஓர் சிறு ஊற்றாக ஆரம்பித்து பின்பு நிலத்தடியில் ஓடி காவேரியாக உருவெடுகிறது. இந்த ஊற்று ஆரம்பிக்கும் இடத்தில், மக்கள் வழிபடுவதற்காக சிறு கோவிலும் உள்ளது. இந்த கோவில் காவேரி அம்மனுக்காக அர்பணிக்கப் பட்டிருகிறது. மக்கள் நாணயங்களை இங்கு இருக்கும் சிறு குளத்தில் போட்டு காவேரி அம்மனிடம் வேண்டிக்கொள்கின்றனர்.

Temple tank of Thalai kaveri..

Temple tank of Thalai kaveri..

 

Brahmagiri hills

Brahmagiri hills

தலைக் காவேரி, பிரம்மகிரி மலையிலிருந்து....

தலைக் காவேரி, பிரம்மகிரி மலையிலிருந்து….

பின்பு அங்கிருந்து கிளம்பி பாகமண்டலா வந்து அங்கிருக்கும் பாகண்டேஷ்வரா கோவிலுக்கு சென்றோம். இந்த கோவில் “Karavali” பாணியில் கட்டி இருகின்றனர். அதாவது கோவில் மேற்பாகம் கோபுரம் மாதிரி இல்லாமல் கூரை வடிவில் இருக்கின்றது. மேலும் இங்கு காவேரி நதியுடன் kannike மற்றும் புராண சிறப்பு வாய்ந்த சுஜ்யோதி நதியும் கலப்பதினால் “திரிவேணி சங்கமம்” என்றும் அழைக்கப்படுகிறது.

Bhagamandala Temple

Bhagamandala, Bhagandeshwara Temple

 

Karavali style of Architecture.

Karavali style of Architecture.

 

Outlet for Abishakam Water..

Outlet for Abishakam Water..

பாகமண்டலவிலிருந்து Madikeri வந்து மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டு Abbey நீர்வீழ்ச்சிக்கு சென்றோம். அங்கு செல்வதற்கான சாலை மிகவும் குறுகலாக இருந்ததினாலும், மழை பெய்து கொண்டிருந்ததினாலும், நீர்வீழ்ச்சியை சென்றடைய சற்றே சிரமமாக இருந்தது.
அங்கு சென்றடைந்த பின்பு, Abbey-ன் அழகு, நாங்கள் கடந்து வந்த சிரமங்களை மறக்கச் செய்தது. நீர்வீழ்ச்சியின் எதிரில் ஓர் பாலம் இருக்கிறது. சாரல் அந்த பாலத்தையும் கடந்து குளிரூட்டியது. என் இரண்டாவது மகன்(5 வயது) அந்த சாரலைக் கண்டு சொன்ன கமெண்ட், “Wow!!!, falls-ல் சுடு தண்ணி எல்லாம் வருதே”.

Abbey falls

Abbey falls

அனைத்தையும் ரசித்து விட்டு நாங்கள் தங்கி இருந்த Home Stay சென்றடைந்தோம். அடுத்த நாள் Dubare – யானைகள் முகாமிற்கு சென்று அவைகளுடன் சிறுது நேரத்தை செலவழித்து விட்டு ஊர் நோக்கி கிளம்பினோம்.

Bylakuppe, தலைக்காவேரி, Abbey நீர்வீழ்ச்சி மற்றும் யானைகளின் முகாம் ஆகிய அனைத்தையும் எங்களை விட எங்கள் வீட்டு குழந்தைகள் மிகவும் ரசித்தனர். ஆகவே எங்களுக்கு மட்டுமல்லாது அவர்களின் மனதிலும் Coorg பயணம், நீங்கா இடம் பெற்றுவிட்டது.

Coorg பயணம் – Bylakuppe

Buddha Sakyamuni.

நீண்ட நாள் கனவு Coorg பயணம், சுதந்திர தினத்தன்று நிறைவேறியது. இரண்டு முறை போவதென்று முடிவெடுத்து கடைசி நேரத்தில் போகமுடியாமல் போன Coorg பயணம். ஆசை ஆசையாய் கிளம்பினோம். இங்கு சுற்றிப்பார்த்த இடங்களை எல்லாம் ஒரே பதிவில் பகிர முடியாததால் தனித் தனி பதிவாக கொடுத்துவிடலாமென்று நினைத்திருக்கிறேன். முதலில் நாங்கள் சென்றது Bylakuppe-வில் உள்ள Namdroling Monastry தங்க கோவில்.

திபெத்தியர்கள் இந்தியாவில் குடியேறும் பொழுது சிலர் Bylakuppe -விலும் குடிபெயர்ந்துள்ளனர். புத்த சமயத்தை பரப்புவதற்காக மைசூர் மாவட்டம், கர்நாடகா – வில் மிகப்பெரிய மடம் ஒன்று Penor Rinpoche என்பவரால் 1963 -ம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. இந்த மடத்தில் 5000-திற்கும் மேற்பட்ட துறவிகள் மற்றும் சந்நியாசிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மடத்தின் முழுப் பெயர் “Thegchog Namdrol Shedrub Dargyeling” சுருக்கமாக “Namdroling”.

 நுழைவு வாயில்...

நுழைவு வாயில்…



ஆரம்ப காலத்தில் இந்த மடத்தினுள்ளே இருந்த மூங்கிலால் கட்டப்பட சிறு கோவிலே 1999 செப்டம்பர் 24 – ல் “Padma Sambhava Buddhist Vihara” எனப்படும் தங்க கோவிலாக உருவெடுத்தது. இந்தக் கோவில் ஒரே நேரத்தில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறவிகள் வழிபட ஏதுவாக கட்டப்பட்டுள்ளது.
Padma Sambhava Buddist Vihara - தங்க கோவிலின் நுழைவு வாயில்...

Padma Sambhava Buddist Vihara – தங்க கோவிலின் நுழைவு வாயில்…


இந்த கோவிலுக்குள் அடியெடுத்து வைத்தவுடன் அங்கு நிலவியிருக்கும் அமைதி நம்மையும் தொற்றிக்கொள்கிறது. எதிரில் 60 அடி உயரம் கொண்ட 3 சிலைகள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
கோவிலின் உள்ளே....

கோவிலின் உள்ளே….


நடுவில் இருப்பவர் Buddha Sakyamuni ( நமக்கெல்லாம் தெரிந்த கௌதம புத்தர்), அவருக்கு வலப்பக்கம் இருப்பவர் Padma Sambhava, மற்றும் இடப்பக்கம் இருப்பவர் Buddha Amitayus.

Buddha Sakyamuni

Buddha Sakyamuni

Buddha Sakyamuni.

Buddha Sakyamuni.


இதில் Padma Sambhava என்பவர் “இரண்டாவது புத்தர் ” என்று திபெத்தியர்களால் அழைக்கப்படுபவர். இவர் தான் புத்த சமயத்தை திபெத் மக்களிடம் பரப்பியவர்.Buddha Amitayus அரசராக இருந்து பௌத்த மதத்தை தழுவியவர். இவருடைய சிலையை நிருவியவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Padma Sambhava

Padma Sambhava

Buddha Amitayus

Buddha Amitayus

பின்பு அங்கிருக்கும் ஓவியங்கள் மற்றும் கலைநயம் மிக்க பொருட்களை ரசித்துவிட்டு அங்கிருந்து கிளம்ப மனமில்லாது கிளம்பினோம்…

Thanga Painting...

Thanga Painting…

Dibetian Thanga Paintings

Dibetian Thanga Paintings

Door Knockers...

Door Knockers…

வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் துறவிகள்.

வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் துறவிகள்.

 புத்த துறவிகள்.

புத்த துறவிகள்.

இடைவேளை நேரத்தில் புத்த துறவிகள்.

இடைவேளை நேரத்தில் புத்த துறவிகள்.

இடைவேளை நேரத்தில் அமைதியாக காட்சியளிக்கும் கோவில்.

இடைவேளை நேரத்தில் அமைதியாக காட்சியளிக்கும் கோவில்.

சிட்டுக் குருவிகள் அமைதியான இடங்களில் மட்டுமே வாழுமோ?

சிட்டுக் குருவிகள் அமைதியான இடங்களில் மட்டுமே வாழுமோ?

ராமேஸ்வரம் – எதிர்பாராத ஓர் அவசர பயணம்

வெளி பிரகாரம்....

இந்த முறை கோடை விடுமுறைக்கு மதுரை சென்ற பொழுது ராமேஸ்வரம் செல்வோம் என்று எதிர் பார்க்கவில்லை. பாலாஜி-யின் பெரியம்மா வீட்டுக்கு நலம் விசாரிக்க சென்ற பொழுது, பெரியம்மா மகன் வியாபார நிமித்தமாக ராமேஸ்வரம் செல்ல வேண்டுமென்று சொன்னவுடன் நானும் தொத்திக் கொண்டேன். அவருடன் அவருடைய மகளும் என்னுடன் மதி-யும் சேர்ந்து கொண்டனர்.

ரயிலில் செல்லலாம் என்று முடிவு செய்து காலை 5 மணிக்கே ரயில் நிலையத்திற்கு சென்று டிக்கெட் வாங்கிக் கொண்டோம். மதுரையிலிருந்து காலை 6 மணிக்கு திருப்பதி எக்ஸ்பிரஸ் ஒன்றும், 6:45 மணிக்கு பாசஞ்சர் ரயில் ஒன்றும் ராமேஸ்வரத்திற்கு செல்கின்றன. எக்ஸ்பிரஸ் ரயில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மட்டும் இயங்குகின்றன. எக்ஸ்பிரஸ்-இல் செல்லலாமென முடிவு செய்து பயணச்சீட்டு வாங்கிக் கொண்டோம்.

மதி பாம்பன் பிரிட்ஜ்-க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தான். ரயில் பிரிட்ஜ் மேல் செல்லும் பொழுது மனதிற்கு மிகவும் சந்தோஷமாகவும், புது அனுபவமாகவும் இருந்தது மதி-க்கு.

பாம்பன் பாலம் துவங்கும் இடம்

பாம்பன் பாலம் துவங்கும் இடம்


பாம்பன் பாலத்தில்...

பாம்பன் பாலத்தில்…

பாம்பன் பாலத்தில்...

பாம்பன் பாலத்தில்…


பிரெஷ் மீன்கள் கடலில் இருந்து....

பிரெஷ் மீன்கள் கடலில் இருந்து….

ராமேஸ்வரம் சென்று இறங்கியவுடன் அங்கிருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோ-வும், குதிரை வண்டியும் இருந்தன. மதி அப்பொழுது தான் குதிரை வண்டியை பார்க்கிறான். அவனுடைய விருப்பத்தின் பேரில் குதிரை வண்டியேறி கோவிலுக்கு சென்றோம்.

மதி குதிரை வண்டியில் ....

மதி குதிரை வண்டியில் ….

பிரகாரங்களில் உள்ள தூண்களுக்கு கும்பாபிஷேகத்தை ஒட்டி வண்ணம் அடித்துக் கொண்டிருந்தனர். எனகென்னவோ அதன் பழமை, வண்ணங்களினால் மறைக்கப்பட்டு விட்டதாக ஒரு வருத்தம்.

வெளி பிரகாரம்.... என்னுடைய canon 10 - 22mm - ல்

வெளி பிரகாரம்…. என்னுடைய canon 10 – 22mm – ல்


வெளி பிரகாரம்...

வெளி பிரகாரம்….


வெளி பிரகாரம்....

வெளி பிரகாரம்….

பிரகாரத்தின் வேலைப்பாடுகள்...

பிரகாரத்தின் வேலைப்பாடுகள்…


பிரகாரத்தின் வேலைப்பாடுகள்...

பிரகாரத்தின் வேலைப்பாடுகள்…

பிரகாரத்தின் வேலைப்பாடுகள்...

பிரகாரத்தின் வேலைப்பாடுகள்…


வெளி பிரகாரத்தின் தூண்கள்.....

வெளி பிரகாரத்தின் தூண்கள்…..


பின்பு அங்கு கோவிலுக்குள் பிரகாரங்களை புகைப் படங்கள் எடுத்துகொண்டிருக்கும் போதே பாலாஜி-யின் பெரியம்மா மகன் தன் வேலைகளையும் முடித்துக்கொண்டு வந்திருந்தார்.

நல்ல வேளையாக உள் பிரகாரத்தை பெயிண்ட் அடிக்காமல் விட்டு வைத்திருந்தார்கள்.

உள் பிரகாரம்...

உள் பிரகாரம்…


சில candid புகைப்படங்கள்….
candid

candid

வியாபார பங்குதாரருடன்...(With Business Partner)

வியாபார பங்குதாரருடன்…(With Business Partner)

கடமையில் கண்ணாக...

கடமையில் கண்ணாக…

TV டவர்...

TV டவர்…


கோவில் கோபுரம்...

கோவில் கோபுரம்…

மாலையில்....

மாலையில்….

அனைத்தையும் ரசித்து விட்டு மாலை 4 மணிக்கு அதே ரயிலில் வீடு திரும்பினோம்.