புது மண்டபம்

மதுரையில் பிறந்த மற்றும் அங்கு வாழ்கின்ற மக்களில் பலர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் கண்டிப்பாக புது மண்டபம் சென்றிருப்பார்கள். ஏனெனில் குழந்தை பிறப்பிலிருந்து, மக்கள் சாகும் வரையில் தேவையான அத்தனை பொருட்களும் கிடைக்கும் இடமாக இருக்கிறது புது மண்டபம். இக்கால மக்களுக்கு புது மண்டபம் என்று சொன்னவுடன் சட்டென நினைவுக்கு வருவது பித்தளை பாத்திரக்கடைகளும் புத்தகக் கடைகளும் தான். ஆனால் பலருக்கு இது எதற்காகக் கட்டப்பட்டது, மற்றும் அதன் வரலாற்றினைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

புது மண்டபத்தின் முன்புறத் தோற்றம்.

புது மண்டபத்தின் முன்புறத் தோற்றம்.


மண்டபத்தின் எதிரில் இருக்கும் நந்தி மற்றும் ராயகோபுரம்.

மண்டபத்தின் எதிரில் இருக்கும் நந்தி மற்றும் ராயகோபுரம்.


இந்த மண்டபம் 1500 க்களில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. வரிசைக்கு 20 தூண்கள் வீதம் 5 வரிசைகளில் மொத்தம் 100 தூண்கள் உள்ள வசந்த மண்டபத்தைச் சுற்றியே இப்பொழுதுள்ள கடைகள் இருக்கின்றன. வருடந்தோறும் சித்திரைத் திருவிழாவின் பொழுது இங்கு மீனாக்ஷி மற்றும் சுந்தரேஸ்வரர் எழுந்தருள்வர்.

நாயக்கர்கள் காலத்தில் இந்த மண்டபம், முக்கியமாக அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கோவிலுக்கு சென்று வந்த பின்னர் இளைப்பாறுவதற்கே பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் இப்பொழுதுள்ள புத்தகக் கடைகள் மற்றும் பித்தளைப் பாத்திரக்கடைகள் இருக்கும் இடம் தண்ணீர் செல்லும் கால்வாயாக பயன்படுத்தி வந்துள்ளனர். ராணியர் வந்து இளைப்பாறும் பொழுது குளிர்ச்சியாக இருக்கவே இந்த ஏற்பாடு.

இந்த மண்டபத்தில் மீனாட்சியின் திக்விஜயக் காட்சியும், சிவபெருமானுடைய ஊர்த்துவத்தாண்டவக் காட்சியும் சிலைகள் மூலம் சித்தரித்துள்ளனர்.

திக்விஜயத்தின் பொழுது தடாதகை மூன்று மார்பகங்களுடன்....

திக்விஜயத்தின் பொழுது தடாதகை மூன்று மார்பகங்களுடன்….

தடாதகையின் எதிரில் சிவபெருமான்.

தடாதகையின் எதிரில் சிவபெருமான்.

பத்திரகாளி

பத்திரகாளி

பத்திரகாளியின் எதிரே ஊர்த்துவ தாண்டவர்.

பத்திரகாளியின் எதிரே ஊர்த்துவ தாண்டவர்.

மண்டபத்தின் தூண்களின் நடுவில் உள்ள பட்டயக் கல்லில் சிவபெருமானின் 64 திருவிளையாடலும் செதுக்கப்பட்டுள்ளன. கிழக்கு வாயிலிலும், தெற்கு வாயிலிலும் 2, 2 குதிரைகள் மண்டபத்தை இழுத்து செல்வது போன்று உருவாக்கி இருப்பதினால் இம்மண்டபம் ஓர் ரதம் போன்று காட்சியளிக்கிறது(இதனை புது மண்டபத்தின் முன்புறத் தோற்றப் படத்தில் காணலாம்).

மீனாட்சி அம்மன் கோவிலின் நந்தி மண்டபத்தில் காணப்படும் 27 சிலைகளை இங்கும் செதுக்கி உள்ளனர்.

இங்கிருக்கும் சிலைகளின் பட்டியல்

இங்கிருக்கும் சிலைகளின் பட்டியல்

அங்குள்ள கடைகள்...

அங்குள்ள கடைகள்…

திருவிழா, சடங்கு, கிராம தேவதைகளின் பூஜைக்கு வேண்டிய பொருட்கள் அனைத்தும் இங்கே வாங்கிக் கொள்ள முடியும்.

திருவிழா, சடங்கு, கிராம தேவதைகளின் பூஜைக்கு வேண்டிய பொருட்கள் அனைத்தும் இங்கே வாங்கிக் கொள்ள முடியும்.

மன்னர் காலத்திற்கு பிறகு ஆங்கிலேயர் காலத்தில் இந்த மண்டபம் ஓர் நூலகமாக செயல்பட்டு வந்திருக்கிறது. இந்தியா சுதந்திரமடைந்த பின்னரே இந்த மண்டபத்தில் கடைகள் முளைக்கத் தொடங்கியுள்ளது. இப்பொழுதுள்ள கடைகளின் வயது கிட்டத்தட்ட 100 ஆண்டுகள்.

சித்திரைத் திருவிழா தொடங்க இருப்பதினால், திருவிழாவின் பொழுது கள்ளழகரின் பக்தர்கள் உடுத்தும் உடைகளைத் தைக்கும் பணி சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

பக்தர்கள்  அணியும் துணிகளை தைக்கும் தையல்காரர்.

பக்தர்கள் அணியும் துணிகளை தைக்கும் தையல்காரர்.

கள்ளழகர் திருமாலிருஞ்சோலை (அழகர் கோவில்) – யிலிருந்து மீனாட்சி சொக்கநாதர் திருமணத்தைக் காண புறப்பட்டு மதுரைக்கு வருவார். வரும் வழியில் அவருடைய பக்தர்கள் இம்மாதிரியான உடைகளை உடுத்தி, சித்திரை மாத சூட்டினை தணிப்பதற்காக அழகரின் மேல் தண்ணீரை பீய்ச்சி அடிப்பர். ஆண்டு முழுவதும் இந்த துணிகள் விற்பனையானாலும், சித்திரை மாதத்திலேயே அதிகம் விற்பனை ஆகுமென இந்தக் கடையை நடத்தும் கார்த்திகேயன் கூறினார். முன்பெல்லாம் திருவிழா முடிந்ததும் வைகை நதிக் கரையினிலேயே தாம் பயன்படுத்திய துணிகளை தூக்கி எறிந்து விடுவார்களாம். ஆனால் இப்பொழுதெல்லாம் reuse செய்ய துவங்கி விட்டார்கள். நல்ல விஷயம் தான்.

கருங்கச்சை மற்றும் குல்லா வியாபாரம் செய்யும் கார்த்திகேயன் தன் தயாரிப்புகளுடன்….

கார்த்திகேயனின் கடை...

கார்த்திகேயனின் கடை…


மதுரை திருவிழா மட்டுமல்லாது திருநெல்வேலியின் சுடலைமாடசாமி திருவிழாவிற்கும் இங்கிருந்தே துணிகள் வாங்கி செல்கின்றனர் பக்தர்கள்.

சுடலைமாடசாமி பக்தர்கள் அணியும் குல்லா...

சுடலைமாடசாமி பக்தர்கள் அணியும் குல்லா…


வருங்காலத்தில் புதுமண்டபத்தை ஓர் அருங்காட்சியகமாக மாற்றும் திட்டத்தில் அரசாங்கம் இருப்பதாக இங்குள்ளவர்கள் தெரிவித்தனர். அப்படி மாற்றினால் அரசாங்கத்திற்கு நல்ல வருமானமும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும், ஆனால் இங்குள்ள கடைகளும், கடைகளை நடத்துபவர்களின் வாழ்க்கையும் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

சிறுவயதுத் தோழன்

எழுதுவதென்பது எவ்வளவு போதை தரக்கூடியது என்பதினை நான் எழுதாமல் விட்ட இந்த 2, 3 மாதங்களில் புரிந்தது(இதெல்லாம் உனக்கே கொஞ்சம் over – ஆ படலையா?). எழுதுவது மட்டும் அல்ல, புகைப்படங்கள் எடுப்பதும் அப்படித்தான் எனக்கு. 2 நாட்களாக கை துறுதுறுவென இருப்பதைப்பற்றி நேற்று தான் பாலாஜி -யிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். இரண்டும், 2-3 மாதங்களாக, மதியின் பரீட்சை, விடுமுறையின் காரணமாக மதுரை வந்தது ஆகியவற்றினால் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. ஆகவே முதலில் ஏதாவது எழுதிவிடலாம் என்று நினைத்த நேரத்தில், எதைப்பற்றி எழுதுவது என்பதும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அப்பொழுது சட்டென என் நினைவுக்கு வந்தது (இரவு 2:30 மணிக்கு), என் சிறுவயது தோழனாகிய “அனுமன்”.

நான் 1-வது அல்லது 2-வது படிக்கும் சமயத்தில் என் பக்கத்து வீட்டிலிருந்து நான் “சுட்ட” ஒரு மண் பொம்மை தான் “அனுமன்”. அப்பொழுது கம்ப்யூட்டரும், T.V. – யும் பிள்ளைகளை ஆட்கொள்ளாத காலம். நாங்கள் விளையாடவேண்டுமேன்றால் ஒன்று வீட்டில் ஏதாவது விளையாட்டுப் பொருட்களுடன், அல்லது தெருவில் பக்கத்து வீட்டு சிநேகிதர்களுடன் விளையாடுவோம். வீட்டில் அம்மாவை படுத்தி முடிந்து விட்டால், பக்கத்து வீட்டிற்கு சென்று விடுவோம். அப்பொழுது பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் பட்டாசுத் தொழில் செய்து கொண்டிருந்தனர். அவர்களின் வீட்டிற்கு சென்று பட்டாசு செய்வதை பார்ப்பதே எங்களுடைய பொழுது போக்காக இருந்தது. பட்டாசு என்றால் அவர்கள் தயாரிப்பது தீபாவளிக்கு வெடிக்கும் பட்டாசு மட்டுமல்ல. மதுரை “கோவில் நகரம்” என்பதினால் சாமியின் “நகர உலா”வும் அடிக்கடி இருக்கும். “நகர உலா” முக்கியமாக இரவு வேளைகளில் நடப்பதினால் சாமி வருவதற்கு முன்பு கலர்கலராக பட்டாசு வெடிப்பார்கள். இந்த மாதிரியான பட்டாசுகளும் “OUT ” எனும் ஒரு வகை பட்டாசும்(மதுரை வாசிகளுக்கு மட்டுமே பரிச்சயம் என நினைக்கிறேன்) என் பக்கத்து வீட்டார் தயாரித்து வந்தனர். சில சமயம் இராமயணக் கதையையும் வாண வேடிக்கையுடன் நடத்திக் காண்பிப்பதுண்டு. கதைகளில் அவர்கள் உபயோகப்படுத்துவதற்காக இராமன், சீதை, இலட்சுமணன், அனுமன் தலைகளை அவர்கள் வீட்டில் செய்து வைத்திருப்பார்கள். ஒருமுறை பட்டாசு செய்வதை வேடிக்கை பார்ப்பதற்காக சென்ற எனக்கு அந்த மண் பொம்மைகளில் அனுமன் மட்டும் மிகவும் பிடித்துப் போகவே, அவர்களை வற்புறுத்தி அதை என் வீட்டில் கொண்டு வந்து வைத்துக் கொண்டேன். அன்று முதல் என் நெருங்கிய தோழனாகி விட்டது அனுமன். பள்ளிக்கூடம் செல்லும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் என் கூடவே இருக்கும் அந்த பொம்மை. பக்கத்து வீட்டுக்காரர்கள் எவ்வளவோ கேட்டும் நான் அனுமனை அவர்களிடம் கொடுக்கவில்லை. எனக்கு அந்த பொம்மை மிகவும் பிடித்து போனதை அறிந்த அவர்கள் கதைக்காக வேறு பொம்மையை செய்து விட்டிருந்தார்கள். எனினும் அவ்வப்பொழுது என்னை சீண்டுவதற்காக “அனுமன் பொம்மை எங்கே?, எங்களிடம் கொடுத்து விடு” எனக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

அவர்கள் வீட்டைக் காலி செய்து போய் பல வருடங்கள் ஆகி விட்டது. நானும் காலப்போக்கில் அனுமனை மறந்து தான் போயிருந்தேன். சில வருடங்களுக்கு முன்பு (எனக்கு கல்யாணம் ஆன பிறகு), அந்த வீட்டில் வேலை பார்த்த ஒருவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு “எங்கே அனுமன்?” எனக் கேட்டவுடன் தான் எனக்கும் ஞாபகம் வந்தது அனுமனைப் பற்றி. அவரிடம் எப்பொழுதும் போல் “கொண்டு வந்து தருகிறேன்” என ready made பதிலைக் கூறிவிட்டு, வீட்டில் வந்து பழைய பாத்திரங்கள் இருக்கும் இடமெங்கும் தேடினேன். இன்றும் என் கையில் சிக்கவில்லை அனுமன். எங்காவது பரண் மேல் இருக்கும் என்ற நம்பிக்கை மட்டும் எஞ்சியிருக்கிறது மனதில்.