Other side of Civilization

Recently me and my husband went to Maddur to take some photographs of the ongoing Garbage issues. Why Garbage issues?. All India People’s Science Network held its 15th Congress on 22nd to 25th of May in Bangalore. This was organized by Karnataka Rashtriya Vijnana Parishat(KRVP) and Bharat Gyan Vigyan Samiti(BGVS). One of the BGVS activists requested me to submit a photo essay on developmental issue. As soon as I heard the topic, Garbage issues came to my mind. So we decided to visit Maddur, a small village near Mandya.

Here are some of the pictures that I took at the Dumping yard of Maddur. This dumping yard is nearly 10 kms from Maddur Village. It is a remote area where one cannot get water and food easily.

There are 2 families living in this yard. They are having 2 toddlers in their family. When we visited this yard, these two kids were playing near their home. We cannot even imagine a house of this kind. They built their house with whatever material available from the garbage, that is, from our waste.
IMG_9584copy1IMG_9587copy1

Garbage arrives at this yard in municipality vehicle 2 to 3 times a day.

IMG_9612copy1

One among the toddlers is a girl. I am not aware of the fact about her schooling but, she was helping her grandpa in the yard during our visit.

IMG_9593copy1

IMG_9600copy1

Whatever we consider as wastes,  were becoming their precious possession. The naked kid casually picked up a dress from the garbage and asked her grandpa to help her in dressing up.

IMG_9607_01copy1

Most of us don’t want to step out during rainy season to avoid the plashy roads. But we were in total shock to see one of the kids drinking the water from the mud to quench his thirst.

IMG_9606copy1

We were debating on technology to dispose the nuclear waste. But we are unable to implement a solution to our normal day-to-day waste disposal.

நாகரீகத்தின் மறுபக்கம்

பதினைந்தாவது அகில இந்திய மக்களின் அறிவியல் மாநாடு (All India People’s  Science Congress) பெங்களூரில் வரும் மே 22 முதல் 25 வரை நடக்க உள்ளது.  இதை ஒட்டி, பாரத அறிவியல் கழக (BGVS) -த்தின் களப்பணியாளர் ஒருவர், நகரமயமாக்கலின் பிரச்சனைகளை புகைப்படமெடுத்துத் தரக் கேட்டிருந்தார். அவர் கேட்டுக்கொண்டதற்காக , பெங்களூரின் தற்போதைய பிரச்சனைகளுள் ஒன்றான “குப்பை” மேட்டை படமெடுக்கலாம் என நானும் பாலாஜியும் தேர்வு செய்தோம். எங்கு செல்லலாம் என யோசிக்கையில், நண்பரின் நண்பர் ஒருவர் “மட்டூர்” எனும் ஊரில் இத்தைகைய பிரச்னை இருப்பதாகத் தெரிவித்தார். ‘சரி, அங்கேயே செல்லலாம்’ என ஓர் சனிக்கிழமை அதிகாலை புறப்பட்டோம்.

மட்டூர் -இல் எடுத்த சில புகைப்படங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

அந்த குப்பை மேட்டின் வளாகத்திலேயே இரண்டு குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன என்பதைப் பார்க்கவே அதிர்ச்சியாக இருந்தது. அக்குடும்பத்தின் குழந்தைகளும் அங்கேயே வசிக்கின்றன என்பது மேலும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

அடிப்படை வசதிக்கு அந்த இடத்தில் வாய்ப்பே இல்லை. தண்ணீரும் உணவும் அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கும் என்று எங்களால்  கற்பனை கூட செய்ய முடியவில்லை. ஏனெனில்,  இந்த குப்பை மேடு ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. அவர்களின் வீடு இதோ இப்படித் தான் இருந்தது.
IMG_9587copy1—-
IMG_9584copy1
தினமும் 2 அல்லது 3 முறை மாநகராட்சி வண்டி, மட்டூரிலிருந்து குப்பைகளை சேகரித்து இங்கு கொண்டு வந்து கொட்டுகிறது.
IMG_9612copy1
தாத்தாவுடன் விளையாட வேண்டிய வயதில், இப்படி குப்பைகளுக்கு நடுவே அவருக்கு உதவியாக வேலையில் இறங்கி விட்டாள்.
IMG_9600copy1—-
IMG_9593copy1
நமக்கு வேண்டாம் என நாம் தூக்கிப் போட்ட பொருட்களே அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் உடைமைகளாக மாறி விட்டிருந்தன.
IMG_9607_01copy1
சாலையில் தேங்கி நிற்கும் மழைத் தண்ணீரில் கால் வைக்கவே தயங்குகிறோம் நாம், ஆனால் அந்த தண்ணீரில் குளித்தும், அதையே குடிக்கும் குழந்தையைப் பார்த்தவுடன், நெஞ்சம் பதைத்தது.
IMG_9606copy1
அணுக்கழிவு (Nuclear Waste)களை அப்புறப்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தைப் பற்றி எல்லாம் சிந்திக்கும் நாம், சாதாரண வீட்டுக் கழிவுகளுக்கு ஓர் தீர்வை காண இயலாத நிலையில் இருக்கிறோம்.  நாகரீகத்தின் உபரி விளைவு இது தான் என்று அறியும் போது, நாம் உண்மையிலேயே நாகரீகமானவர்கள் தானா? என்ற கேள்வி எழுகிறது.

Roots Of India -வுடன் சித்திரைத் திருவிழா

சென்ற வருடம் முதல் முறையாக சித்திரை திருவிழாவிற்கு சென்று வந்த நான், இம்முறை Roots Of India வின் சார்பாக Photowalk ஆக சித்திரை திருவிழாவை, புகைப்படக்கலையில் ஆர்வமுள்ள சில நண்பர்களுடன், சென்று வந்தேன்.

Roots Of India(ROI) பற்றி தெரியாதவர்களுக்காக ஒரு சிறு முகவுரை.  முகநூலில் புகைப்படக்கலைஞர்களுக்காக பல குழுமங்கள் இருக்கின்றன. அதில் அக்கலைஞர்களுக்கு மத்தியில், 30,000க்கும் அதிகமான உறுப்பினர்களுடன் பிரபலமாக உள்ள குழுமமே ROI. சென்னை யில், புகைப்படக்கலையில் ஆர்வமுள்ளவர்களுக்காக இயங்கி வரும் “Chennai Weekend Clickers” குழுமத்தின் இன்னுமொரு வடிவமே இக்குழுமம். இதில் இந்தியாவின் வேர்களாக கருதப்படும் கலை, கலாசாரம், பண்டிகைகள், திருவிழாக்கள் ஆகியன பற்றிய படங்களை பதியலாம். இங்கு படங்களை பதிபவர்கள்,  பொழுதுபோக்கு புகைப்படக்கலைஞர்களில் இருந்து, நன்கு அனுபவமிக்க கலைஞர்கள் வரை அடங்குவர்.

வருடாவருடம் ROI ஆரம்பித்த மே 1-ம் தேதி, தேசிய அளவில் Photowalk நடத்துவது வழக்கம். இவ்வருடம் 15-க்கும் மேற்பட்ட இந்திய நகரங்கள் இதில் பங்குபெற்றன. சென்ற வருடம் நான் பெங்களூரில் இருந்ததினால் அங்கேயே கலந்து கொண்டேன். இவ்வருடம் மதுரையில், மீனாக்ஷி திருக்கல்யாணம் முடிந்த அடுத்த நாள்,  மே 1-ம் நாள் சொக்கரும், மீனாட்சியும் தேரில் மாசி வீதியில் வலம் வரும் நாளில் Photowalk சென்றேன். ROI யில் ஆர்வமுள்ள சில முகநூல் நண்பர்களும் என்னுடன் கலந்து கொண்டனர்.

Photowalk – ல் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் அன்றைய அனுபவம் மிகவும் பிடித்துப் போகவே, அடுத்த நாள் கள்ளழகர் அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு கிளம்பும் விழாவிற்கும் சேர்ந்தே போகலாம் என முடிவு செய்து அழகர் கோவிலையும் ஒரு கலக்கு கலக்கி விட்டோம்.

அங்கு எடுத்த சில புகைப்படங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
தேர் - ஐ பார்க்க மதுரை விளக்குத்தூண் பக்கத்தில் கூடி இருந்த மக்கள்...

தேர் – ஐ பார்க்க மதுரை விளக்குத்தூண் பக்கத்தில் கூடி இருந்த மக்கள்…

IMG_9248copy
அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தேரின் அடிப்பாகம்.

அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தேரின் அடிப்பாகம்.

Selfie எடுத்துக் கொள்ளும் பக்தர்கள்.

Selfie எடுத்துக் கொள்ளும் பக்தர்கள்.

கருப்பு வேடமணிந்த பக்தர்கள்.

கருப்பு வேடமணிந்த பக்தர்கள்.

கருப்பு வேடமணிந்த பக்தர்கள்.

கருப்பு வேடமணிந்த பக்தர்கள்.

தேர் வந்து சென்ற பின்பு, சாலையெங்கும் பிளாஸ்டிக் கவர்கள்.  நல்ல வேளையாக அவற்றை அப்புறப்படுத்துவதற்கு இவர்களைப் போன்றவர்களின் சேவை மிகவும் தேவையாகத்தான் இருக்கிறது.

தேர் வந்து சென்ற பின்பு, சாலையெங்கும் பிளாஸ்டிக் கவர்கள். நல்ல வேளையாக அவற்றை அப்புறப்படுத்துவதற்கு இவர்களைப் போன்றவர்களின் சேவை மிகவும் தேவையாகத்தான் இருக்கிறது.