சத்யா – 3

முந்தைய பதிவில், சத்யாவை அறிமுகப்படுத்தும் போது, அவளின் கணவன்,  குடிப்பழக்கத்தினால் இவளை அடித்து கொடுமை படுத்தியதாக கூறி இருந்தேன் அல்லவா… அதை பற்றி இந்த பதிவில் கொஞ்சம் பேசலாம் என இருக்கிறேன். 

ல்யாணம் ஆன முதல் நாள் தான் அவனுக்கு வலிப்பு இருப்பது அவளுக்கு தெரிந்திருக்கிறது. ஆகையால் அவன் அருகில் செல்லவே இவளுக்கு பயம். அதில் தொடங்கிய கருத்து வேறுபாட்டினால், இன்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அவனோ முரடன், இவளோ செக்ஸ் பற்றிய சரியான புரிதல் இல்லாத வெகுளி. ஆதலால், நிறைய நேரத்தில் அவனிடம் கண் மண் தெரியாமல், ரத்தம் வரும் அளவிற்கு அடி வாங்கி இருக்கிறாள். சில நேரம் தையல் போடும் அளவிற்கு கூட. இதை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் இங்கு பெங்களூரில் தனித்து வாழ்ந்து வருகிறாள். தான் இருக்கும் இடம் அவனுக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அடிக்கடி வீட்டையும், போன் நம்பரையும் மாற்றி விடுவாள். 

த்தனைக்கும் வீட்டில் பார்த்து ஏற்பாடு செய்த மாப்பிள்ளை தான் இவள் கணவன். பிரச்சனை வரும் பொழுதெல்லாம் அம்மா, அப்பாவிடம் சென்று முறையிடுவாள். ஒன்றும் பலனில்லை, எல்லா பெற்றோர் மாதிரியே அவர்களும், இவளையே சகித்துக் கொண்டு போகச் சொல்லி இருக்கிறார்கள். எத்தனை நாள் தான் பொறுத்து போக முடியும். அதனால் அமைதியாக தனித்து வாழ்ந்து வருகிறாள். ஆனாலும் அவ்வப்பொழுது இவள் வீட்டிற்கு வந்து தொல்லை கொடுத்துக் கொண்டே தான் இருப்பான் அவன். 

ப்பொழுது கூட 6 மாதத்திற்கு முன் இவள் வீட்டிற்கு வந்து தங்கி இருந்திருக்கிறான். எப்பொழுதும் போலவே சண்டை. ஆனால் இம்முறை, தைரியமாக, “சண்டை போடுவதென்றால் இங்கு இருக்க வேண்டாம், வீட்டை விட்டு போய்விடு”, என கண்டிப்புடன் சொல்லி இருக்கிறாள். அவன் வீட்டை விட்டு வெளியேறியவுடன் கொஞ்சம் நிம்மதி அடைந்திருக்கிறாள். ஆனால் அந்த நிம்மதி அதிக நாள் இருக்கவில்லை. ஓர் நாள், அதிகாலை இவளது உறவினர் யாரோ போன் செய்து, “மார்க்கெட்டில் இருக்கும் கால்வாயில் உன் புருஷன் இறந்து கிடக்கிறான்” என சொல்லி இருக்கிறார். உடனே பதறி அடித்துக் கொண்டு அங்கு சென்று பார்த்திருக்கிறாள். அப்படி ஒன்றும் அங்கு நடக்கவில்லை என அங்கிருந்தவர்கள் கூறி இருக்கிறார்கள். மேலும் சிலர் அவனை அங்கு பார்த்ததாகவும் தெரியப்படுத்தி இருக்கின்றனர். அதைக் கேட்டு கொஞ்சம் அமைதியாகி  இருக்கிறாள். ஆனாலும் மனதில் ஒருவித பயம். அதை அதிகமாக்கும் விதமாக கணவன் வீட்டு வழியாக வந்த உறவினர்கள் இவளை, “நீ தான் ஆள் வைத்து ஏதோ செய்துவிட்டாய்” என பழி சுமத்தி இருக்கிறார்கள். 

தை எல்லாம், வேலை குறைவாக இருக்கும் ஓர் நாள் என்னிடம் சொல்லி அழுது கொண்டிருந்தாள். நானும், “சரி அதை பற்றி எல்லாம் கவலைப்படாதே, நீ எதுவும் செய்யவில்லை என்று உன் மனதுக்கு தெரியும் அல்லவா, மற்றவர்கள் சொல்வதை காதில் வாங்கி கொள்ளாதே” என தைரியம் கூறிக் கொண்டிருந்தேன். வீட்டில் அன்று அவள் அவ்வளவாக பேசவும் இல்லை, முகத்தில் எப்பொழுதும் இருக்கும் சந்தோஷமும் இல்லை. ஏதேதோ சொல்லி தேற்றிக்கொண்டிருக்கும் பொழுது பாலாஜி அங்கு வந்தார். எல்லாவற்றையும் பக்கத்து அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தார் போலும். “விடு சத்யா, இப்பொழுது பிள்ளைகளை எப்படி நன்றாக படிக்க வைப்பது என்பதில் மட்டும் கவனம் செலுத்து” என்று அவர் பங்குக்கு தைரியம் கூறி கொண்டிருந்தவர், என்னிடம், ” இனிமேல் ஏதாவது பிரச்சனை என்றால் சத்யாவிடம் சொல்லிவிடு வனிலா, ரௌடிகளை வைத்து அவள் பார்த்து கொள்வாள்” என என்னிடம் கூறியவுடன் எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அங்கு இருந்த இறுக்கம் சற்று குறைந்து வீட்டின் சூழல் சற்று லேசாக ஆரம்பித்தது. மேலும் சத்யாவிடம், “இப்படி ஒரு ‘டான்’, அண்டர் கவரில் எங்கள் வீட்டில் வேலை செய்வதை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது சத்யா” என கூறினாரே பார்க்கணும், சத்யா தன் கவலை எல்லாம் மறந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். 

தனால் தான் அக்கா இங்கு வரும் பொழுது என் மனதுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. என் கவலையை எல்லாம் நீங்கள் இருவரும் மறக்க செய்து விடுகிறீர்கள்..” என சிரித்துக் கொண்டே தன் வேலையை தொடர ஆரம்பித்தாள். 

 சத்யா வீட்டு வேலையில் செய்யும் சில சேட்டைகளை அடுத்த பதிவில் கூறுகிறேன் 🙂 

Leave a comment