பட்டாபிராமர் கோவில் – ஹம்பி

இந்த வருட கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ஹம்பி செல்லலாம் என்று 2, 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு அதை ஒரு வழியாக செயல்படுத்தியும் விட்டோம். ஏற்கனவே 2005-ம் வருடம் ஒரு முறை ஹம்பி சென்று வந்துவிட்ட காரணத்தினால், அப்பொழுது என்னென்னவெல்லாம் விட்டு போய் இருந்ததோ அங்கெல்லாம் சென்று விட முடிவெடுத்தோம். அதன் படி மூன்றாம் நாள் நாங்கள் சென்றது கமலாபுரம் என்னும் ஊரில் இருக்கும் பட்டாபிராமர் கோவில். அதென்ன முதல் இரண்டு நாட்களுக்கு சென்று வந்த இடங்களை எல்லாம் விட்டுவிட்டு மூன்றாம் நாள் சென்ற கோவில் மட்டும் என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. ஏனோ இந்த கோவில் எனக்கு அவ்வளவு பிடித்து போனது. பிடித்ததிற்கான காரணத்தை சொல்ல முடியவில்லை. ஏதோ ஓர் ஈர்ப்பு.

கோவிலின் முகப்பில் இருக்கும் மண்டபம்....

கோவிலின் முகப்பில் இருக்கும் மண்டபம்….

கோவிலின் உள்தோற்றம்....

கோவிலின் உள்தோற்றம்….

இந்தக் கோவில் 1540-ம் வருடம் அச்சுதராய மன்னரின் ஆட்சிக்காலத்தில் திம்மராயர் என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள கோபுரம் பிற்கால விஜயநகர கட்டிடக்கலைக்கு நல்ல ஒரு உதாரணம். இது சோழ கட்டிடக்கலை முறையில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இது கமலாபுரம் தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. ஆனால் விருபாக்ஷா மற்றும் விட்டலா கோவில்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏனோ இந்த கோவிலுக்கு வருவதில்லை. அதனால் நாங்கள் அங்கு சென்றிருந்த போது யாருமே இருக்கவில்லை. அதுவே ஒரு வெறுமையை கொடுத்தது. 2005-ல் நாங்கள் செய்த பெரிய தவறு, இந்த கோவிலுக்கு செல்லாதது தான்.

அம்மன் சன்னதிக்கு வழிகாட்டும் கோவில் சுவர்கள்...

அம்மன் சன்னதிக்கு வழிகாட்டும் கோவில் சுவர்கள்…

விட்டலா கோவில் அளவுக்கு பெரியதாய் இருக்கிறது இந்த பட்டாபிராமர் கோவிலும். அந்த கோவில் அளவுக்கு வேலைப்பாடுகள் இல்லை தான், இருந்தாலும் அழகில் சற்றும் குறைந்து விடவில்லை. இங்கிருக்கும் மண்டபத்தின் முதல் வரிசை தூண்களில் அழகான இரண்டு யாழிகள் பிரமாண்டத்தை கூட்டுகின்றன. அங்கிருக்கும் தூண்களின் அடிப்பாகத்தை சிங்கங்கள் தாங்கிப்பிடித்திருப்பதிலிருந்து, இது சோழர்களின் கட்டிடக்கலை பாணி என்று தெரிந்து கொள்ள முடிகிறது(இதை என் தோழி லக்ஷ்மி-யிடமிருந்து சுட்டது).

பிரதான மண்டபத்தின் அடிப்பாகத்தில் சிங்கங்களின் சிலைகள்....

பிரதான மண்டபத்தின் அடிப்பாகத்தில் சிங்கங்களின் சிலைகள்….

மண்டபத்தின் முகப்பில் இருக்கும் யாழி சிலைகள்....

மண்டபத்தின் முகப்பில் இருக்கும் யாழி சிலைகள்….

கோவில் முழுக்க சுற்றிவிட்டு நடுவில் இருக்கும் கற்பக்கிரகத்திற்கு சென்றோம். அங்கு பட்டாபிராமர் இருக்க வேண்டிய இடம் காலியாக இருந்தது. பிற்காலத்தில் வேறு பல மன்னர்களின் ஆக்கிரமிப்பின் பொழுது சூறையாடப்பட்டிருக்கலாம். ஏனோ அதைப்பார்க்கையில் பறவை இல்லாத பறவைக்கூட்டைப் பார்த்ததைப் போன்றதொரு வருத்தம்.

IMG_1335copy

பிரதான மண்டபத்தின் உள்தோற்றம்....

பிரதான மண்டபத்தின் உள்தோற்றம்….

பட்டாபிராமர் சன்னதிக்கு முன் இருக்கும் பிரதான மண்டபம்....

பட்டாபிராமர் சன்னதிக்கு முன் இருக்கும் பிரதான மண்டபம்….


பிறகு இங்கிருக்கும் கோபுரமும் அதே சோழர் பாணியில் காட்சியளிக்கிறது. கோபுரத்தின் அடிப்பாகம் கற்களினாலும், மேல் பாகம் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையினால் கட்டி இருக்கிறார்கள். கோபுரத்தின் மேல்பாகம் காலத்தினால் சற்றே களையிழந்து போயிருந்தது.

கோபுரத்தின் மேல் வளர்ந்திருக்கும் செடிகள்....

கோபுரத்தின் மேல் வளர்ந்திருக்கும் செடிகள்….

அதனையும் கற்களினாலேயே கட்டி இருந்திருந்தால் திம்மராயர் கட்டும் பொழுது இருந்திருந்த அதே அழகு இன்று வரை நீடித்திருக்குமே என்ற ஆதங்கமே மிஞ்சியது.

சிவகங்கே

எல்லா பிள்ளைகளை போல, என் மூத்த மகனுக்கு கன்னடம் படிக்க அவ்வளவு ஆர்வம் இருக்கவில்லை. அவனுடைய ஆர்வத்தை எப்படி அதிகரிப்பது என நானும், என் கணவரும் யோசிக்காத நாட்களே இல்லை. கன்னட பத்திரிக்கை வாங்கித்தருவதில் தொடங்கி, சந்தமாமா (கன்னடத்தின் அம்புலிமாமா) மற்றும் பல கதை புத்தகங்கள் வாங்கி கொடுத்தாகி விட்டது. ஆனாலும் அவனுடைய ஆர்வம் கன்னடத்தின் மேல் செல்லவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய பாடம் ஒன்று கன்னடத்தில் படித்திருக்கிறான். அது “சிவகங்கே” எனும் ஊரைப்பற்றியது. அங்கிருக்கும் பாதளகங்கை மற்றும் மலை உச்சியில் சிலையாக வடிக்கப்பட்ட நந்தியும் அவனுடைய கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. அங்கு செல்ல வேண்டுமென முதலில் அவன் சொன்னவுடன், போகலாமா, வேண்டாமா என நாங்கள் சிறிது யோசித்தோம். கன்னட பாடத்தில் வருவதாக சொன்னவுடன், அவனுடைய ஆர்வத்தை வளர்க்க இதை விட நல்லதொரு வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்து உடனே அங்கு செல்வதென்று முடிவெடுத்து கிளம்பினோம். நாங்கள் போகப்போகிறோம் என்று சொன்னவுடன் மதி(என் மூத்த மகன்)-யின் நண்பர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொண்டனர்.

சிவகங்கே – பெங்களூருவில் இருந்து 54 கீ. மீ. தொலைவில், தும்கூர் செல்லும் சாலையில் இருக்கிறது. வீட்டில் இருந்து கிளம்பி 2 மணி நேரத்தில் அங்கு சென்றடைந்தோம். வழியிலேயே காலைச் சாப்பாட்டை முடித்துக் கொண்டோம்.

நுழைவு வாயில்....

நுழைவு வாயில்….

கோவிலின் முன் தோற்றம்...

கோவிலின் முன் தோற்றம்…

மலை மேல் ஏறுவதற்கான படிகள்...

மலை மேல் ஏறுவதற்கான படிகள்…

முதல் தரிசனம் - ஞான முதல்வருடையது.....

முதல் தரிசனம் – ஞான முதல்வருடையது…..

கீழிருந்து மலை ஏறும் வழி முழுவதும் சின்ன சின்ன கோவில்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்று தான் பாதள கங்கை. இரண்டு பாறைகளுக்கு நடுவில் ஊற்று ஒன்று அமைதியாக வழிந்தோடுகிறது. அதையே பாதாள கங்கை என்று வழிபடுகின்றனர். இந்த ஊற்றை கங்கை என்று மக்கள் கருதுவதினால், சிவகங்கைக்கு “தக்ஷிண காசி” (தெற்கு காசி) என்ற பெயரும் உண்டு.

வீரபத்திரர்...

வீரபத்திரர்…

பாதாள கங்கை...

பாதாள கங்கை…

பாதாள கங்கை-யின் உட்புறம்...

பாதாள கங்கை-யின் உட்புறம்…

அங்கு எடுத்த புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மலையை செதுக்கி படிகள்....

மலையை செதுக்கி படிகள்….

படிகளில் ஏறும் பொழுது பிடித்துக் கொள்ள இரும்பு கைப்பிடி....

படிகளில் ஏறும் பொழுது பிடித்துக் கொள்ள இரும்பு கைப்பிடி….

பக்தர்கள் இளைப்பாற கலைநயம் மிக்க மண்டபம்...

பக்தர்கள் இளைப்பாற கலைநயம் மிக்க மண்டபம்…

பசவண்ணா...

பசவண்ணா…

சித்து-வை சமாளிக்க ட்ரக்...

சித்து-வை சமாளிக்க ட்ரக்…

மலையின் உச்சியில் ஒரே கல்லில் செதுக்கிய நந்தி ஒன்று உள்ளதென்று முன்னரே கூறினேன் இல்லையா, உச்சி வரை செல்ல என்னால் முடியாதென்பதால், என்னுடன் வந்திருந்த பிளிக்கர் தோழி வனிதா-வுடன் பாதியிலேயே சித்துவை வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டோம். மலை உச்சி செல்லும் வழி மிகவும் செங்குத்தாகவும், அபாயகரமாகவும் இருந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாது, மதி மற்றும் அவனது நண்பர்களை, பாலாஜி கூட்டிச்சென்றார். அது மட்டும் இல்லாமல் சித்து எப்பொழுதெல்லாம் கால் வலியென்று சொன்னானோ, அப்போதெல்லாம் அவனை தன் தோளில் தூக்கிக் கொண்டு நடந்தார். குழந்தைகளுக்காக அவர் எடுத்துக்கொண்ட சிரமங்கள் பார்ப்பதற்கு நமக்கு கஷ்டமாக இருந்தாலும், அவர் மிகவும் சந்தோஷமாகவும், திருப்தியாகவும் உணர்ந்தார்.

பாலாஜியின் தோளில் சித்து....

பாலாஜியின் தோளில் சித்து….

இங்கு இருக்கும் கோவில்களையும், மலையின் அழகையும் ரசிக்கும் அதே நேரத்தில், இங்கு வரும் மக்களின் தாகத்தையும், பசியையும் போக்கும் விதமாக அங்கு இருக்கும் கடைகளில், அவர்கள் உபயோகிக்கும் பிளாஸ்டிக் காகிதங்கள் மலையின் அழகை கெடுப்பதில்லாமல், சுற்றுப் புறச்சூழலையும் மாசுபடுத்துகின்றன.

குப்பைத்தொட்டியையும்  தாண்டி....

குப்பைத்தொட்டியையும் தாண்டி….

பிளாஸ்டிக்-இன் தீமைகள் புரியாத குரங்குகளின் கையில்....

பிளாஸ்டிக்-இன் தீமைகள் புரியாத குரங்குகளின் கையில்….

பசியின் பிடியில் இருக்கும் குரங்குகளுக்கு....

பசியின் பிடியில் இருக்கும் குரங்குகளுக்கு….


பிளாஸ்டிக் பற்றி பேசும் பொழுது இன்னொரு நிகழ்வும் ஞாபகத்திற்கு வருகின்றது. போன வாரம் பெங்களூருவில் “கடலைக்காய் பரிஷே” எனும் “கடலை சந்தை” ஒன்று நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற அந்த சந்தையில் பிளாஸ்டிக் பைகளுக்கு மட்டும் விவசாயிகள் செலவழித்தது 1.7 லட்சம் ரூபாய். அந்த விவசாயிகளிடம், “பிளாஸ்டிக் பைகள் தர மாட்டோம்-ன்னு சொல்ல வேண்டியது தானே” எனக் கேட்டால், “நாங்கள் தர மாட்டோம்-ன்னு சொன்னா, எங்களிடம் கடலை வாங்காமல், பக்கத்து கடைகளில் வாங்கிகிறாங்க” என்று வருத்தப்பட்டனர். மேலும் பாலிதீன் பைகளுக்காக செலவு செய்த பணம் எங்கள் கையில் இருந்திருந்தால், நாங்கள் ஊருக்கு வந்து போகிற பஸ் செலவுக்கு உபயோகப்பட்டிருக்கும் எனவும் புலம்பினர். நம் கையில் உள்ள பணத்தை செலவு செய்து சுற்றுபுறசூழலை மாசுபடுத்துகிறோம். இதைத் தான் சொந்த செலவில் சூனியம் வச்சுகிறது-ன்றதா….