அதிகாலை வேளையில் கப்பன் பார்க் எப்படி இருக்கும்?. சென்று பார்க்கலாமே என்று தோன்றியது… காலை 6:30 மணிக்கு அங்கே ஆஜர். ரொம்ப சீக்கிரம் போகப் போகிறோம் என்று நினைத்து போன எனக்கு வெட்கம் தான் மிஞ்சியது. கப்பன் பார்க் நடைப்பயிற்ச்சியாளர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள், Shuttle விளையாடுபவர்கள் என களைக்கட்டி இருந்தது. அதில் சில பெரியவர்கள் அங்கு வசிக்கும் புறக்களுக்காக வீட்டிலிருந்தே தீனி கொண்டு வந்திருந்தனர். புறாக்கள் பறக்கும் அழகே தனி.
அதிகாலை வெயிலில் பூக்களும் மரங்களின் இலைகளும் அழகாக மின்னியதைக் காண 2 கண்கள் போதவில்லை.
அங்கே நான் கண்டு ரசித்த சில அழகான காட்சிகளை என்னுடைய Camera மூலம் பதிவு செய்ததை இங்கே உங்களுக்காக பகிறுகிறேன்.
என்னதான் குப்பைத் தொட்டிகள் எல்லாம் வைத்து பார்க்-ஐ சுத்தமாக வைத்திருக்க முயற்சித்தாலும் நமது மக்களின் கைவண்ணத்தைப் பாருங்கள்..
எப்பொழுது தான் நம் நாட்டிற்க்கு plastics – லிருந்து விடுதலையோ…
அருமையான பகிர்வு, வனிலா.
நன்றி ராமலக்ஷ்மி.
arumai. arumai.